ஆப்நகரம்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: முதல்வர் தொடங்கி வைத்தார்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Samayam Tamil 19 Jun 2021, 10:58 am
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Samayam Tamil tn free text books


தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டன. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டாலும் மீண்டும் கொரோனா அதிகரித்ததால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. மேலும் எந்த வகுப்புக்கும் தேர்வு நடத்தப்படாமல் தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் எதற்கெல்லாம் அனுமதி? வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு!
இந்த கல்வி ஆண்டிலாவது மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடங்கள் படிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பு படிப்படியாக் குறைந்து வருவது நம்பிக்கையளித்தாலும் விரைவில் மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதும், அதில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவதால் பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாலினுக்காக டெல்லியில் நடந்த பூஜை: இதுக்கு தான் துர்கா கூடவே போனாரா?
பாதிப்பு குறைந்தால் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார். ஆனால் அது பொது மக்களின் கையில்தான் உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த கல்வி ஆண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் நடத்தப்பட உள்ளன. இதனால் இன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பிடிஆர் பதவியை உருவும் ஸ்டாலின்? என்ன நடக்கிறது மேல் மட்டத்தில்?
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வித் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பாகும் பாடங்களையும் தொடங்கிவைத்தார். இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி