ஆப்நகரம்

சிரித்ததால் முதல்வர் பதவி பறிபோச்சு: ஸ்டாலின்

சிரித்ததால் முதல்வர் பதவியை இழந்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Mar 2018, 1:45 pm
சென்னை: சிரித்ததால் முதல்வர் பதவியை இழந்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mk stalin mocks opanneerselvam
சிரித்ததால் முதல்வர் பதவி பறிபோச்சு: ஸ்டாலின்


ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக செயல் தலைவரும் தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், சிரிப்புக்கும் சில மதிப்பு உண்டு என்றும் சிரித்ததால் முதல்வர் பதவியை இழந்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பின் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட சசிகலா அப்போதைய முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினிமா செய்ய வைத்தார். பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ் ஜெயலலிதா சமாதி முன்வந்து சசிகலாவுக்கு எதிராக செய்தியாளர்களிடம் குமுறினார்.

அப்போது போயஸ் கார்டனில் பேட்டி கொடுத்த சசிகலா, சட்டப்பேரவையில் ஸ்டாலினை பார்த்து ஓபிஎஸ் சிரிக்கிறார் என்றும் ஆட்சியைக் கவிழ்க்க திட்டம் போடுகிறார் என்றும் குற்றம் சாட்டினார் என்பது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி