ஆப்நகரம்

தொடரும் வாரிசு அரசியல்... வேலூரில் துரைமுருகன் மகன் போட்டி: ஸ்டாலின் மீண்டும் அறிவிப்பு

கதிர் ஆனந்த் மீண்டும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிடுவார் என திமுக அறிவித்துள்ளது. இவரை எதிர்த்து அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டி.

Samayam Tamil 6 Jul 2019, 1:15 pm
வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சி பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட இருக்கிறார்.
Samayam Tamil kathir-anand3434-1554884936


திமுக சார்பில் வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல்களில் போட்டியிடும் வேட்பார் பெயரை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய திமுகவின் பொருளாளருமான துரை முருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ரத்துக்கு முன்பும் கதிர் ஆனந்த்தையே திமுக வேட்பாளராக அறித்தது திமுக. தற்போது மீண்டும் அவரே போட்டியிடுவார் என அறிவித்துள்ளது. இவரை எதிர்த்து அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிட உள்ளார்.

கதிர் ஆனந்த் - துரை முருகன்


இவரும் ஏற்கெனவே அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்தான். இன்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளார்.

வேலூர் தொகுதியில் மே 18ஆம் தேதி நடக்க இருந்த மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு அபரிமதிமான பணப்பட்டுவாடா காரணமாக ரத்தானது. இதனையடுத்து, வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்கிறது. ஆகஸ்ட் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

'கலர்' சென்டிமென்ட் பார்க்கும் வேலூர் தொகுதி வேட்பாளர்கள்

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோர் இன்று தலைமைச் செயலகம் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக மதிமுகவுக்கும் ஒரே மாநிலங்களவை இடத்தைத் தருகிறது. அதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். அவரும் இன்று வேட்புமனு தாக்கல செய்தார்.

இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மற்றும் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரும் தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்தனர்.

அடுத்த செய்தி