ஆப்நகரம்

கருணாநிதி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அவரது மகன் மு.க.ஸ்டாலின் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

Samayam Tamil 9 Aug 2018, 12:22 pm
முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அவரது மகன் மு.க.ஸ்டாலின் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
Samayam Tamil Stalin Karunanidhi Memorial


முன்னாள் முதல்வா் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7ம் தேதி மாலை உயிாிழந்தாா். அவரது உடல் சட்டப் போராட்டத்திற்கு பின்னா் மெரினா கடற்கரையில், அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மிகவும் அமைதியாகவும், பிரமாண்டமாகவும் நடைபெற்ற கருணாநிதியின் இறுதி ஊா்வலத்தில் ஸ்டாலின் உள்பட கட்சி உறுப்பினா்கள், தொண்டா்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனா். கருணாநிதியின் உடலுக்கு தமிழக முதல்வா் உள்பட 6 மாநில முதல்வா்கள், பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவா்கள் அனைவரும் நேரில் வந்து மரியாதை செலுத்தினா்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அவரது மகனும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் வந்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். ஸ்டாலினுடன் கட்சி செய்தி தொடா்பாளா் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினா்கள் ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் வந்திருந்தனா்.

மேலும் தற்போது கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதியில் கூடாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணி நிறைவு பெற்றவுடன் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவா் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி