ஆப்நகரம்

கருணாநிதியின் நினைவு தின கூட்டத்தில், சுஷ்மாவுக்கு இரங்கல் தெரிவித்த ஸ்டாலின்!

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மறைவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கருணாநிதியின் நினைவு தின நிகழ்ச்சியில் இதனை தெரிவித்தார்.

Samayam Tamil 7 Aug 2019, 7:47 pm
கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தின பொதுக்கூட்டத்தில், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
Samayam Tamil MK Stalin pays tribute to sushma swaraj


தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: ‘அனைவருக்கும் வணக்கம்! மத்திய அரசின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இயற்கை எய்தினார்.

Also Read This:

கருணாநிதியின் மேல் மாறாத பற்றும், கட்சி பாகுபாடின்றி அனைவரிடத்திலும் நல்ல முறையில் பழகக்கூடியவர். மத்திய அமைச்சராகவும், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், டெல்லி முதல்வராகவும் சிறப்பாக பணியாற்றியவர் சுஷ்மா ஸ்வராஜ். அவருடைய மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த கூட்டத்தின் மூலம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்’. இவ்வாறு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயணசாமி, திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னை முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் முழுஉருவச் சிலை திறக்கப்பட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிலையை திறந்து வைத்தார். அதன்பிறகு, மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நாராயணசாமி உள்ளிட்ட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அடுத்த செய்தி