ஆப்நகரம்

நகை கடன்கள் ரத்து: மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

திமுக ஆட்சிக்கு வந்ததும் நகைக் கடன்கள் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 Jan 2021, 10:29 pm
திருவள்ளூர் மாவட்டம் நத்தம் ஊராட்சியில் இன்றூ சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அவரது துணைவி துர்காவும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.
Samayam Tamil MK Stalin


அப்போது ஸ்டாலின் பேசியபோது, “இன்னும் நான்கு மாதங்கள்தான் இருக்கின்றன. இதில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தமிழக மக்கள் தயாராக இருக்கின்றனர். இதில் எந்த மாற்றமும், சந்தேகமும் இல்லை.

நம்ம ஊரு பொங்கலுக்கு ஏன் வருகிறார் ஜே.பி.நட்டா?
தேர்தலுக்கு பின் நான் உறுதியாக கூறுகிறேன், நீட் தேர்வை பொறுத்தவரை, தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் நுழைய முடியாமல் இருந்தது போல, இன்னும் வெளிப்படையாக சொன்னால், அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை நீட் தமிழகத்துக்குள் நுழைய முடியவில்லை.

எனினும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் நீட் தமிழகத்துக்குள் நுழைந்துவிட்டது என்றால், அந்த அளவிற்கு மத்திய அரசிடம் மண்டியிட்டு ஒரு அடிமையாக அவர் செய்திருக்கும் ஊழலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக நீட் தேர்வை ஆதரிக்கிறாரே தவிர வேறொன்றும் இல்லை.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்போது நீட் தேர்வை உடனடியாக தமிழகத்தில் இருந்து அகற்றுவதற்கான எல்லா முயற்சிகளிலும் கடைசி வரை உறுதியாக இருந்து நிறைவேற்ற தயாராக இருக்கிறேன்.

தஞ்சை பேருந்து விபத்து: முதல்வர் இழப்பீடு அறிவிப்பு!
கலைஞர் வழிநின்று விவசாயிகள் கடனை ரத்து செய்வதற்கான உத்தரவை திமுக அரசு போடும். ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களில் பிறந்தவர்கள் வறுமையால் நகைகளை அடமானம் வைத்து அதற்கு வட்டி கட்டும் சூழல் நீடிக்கிறது.

எனவே, 5 சவரன் வரையிலான நடகைக் கடன்களை ரத்து செய்வோம் என கடந்த மக்களவை தேர்தலின்போது சொன்னோம். சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தபிறகு, ஐந்து சவரன் நகைக் கடன் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி