ஆப்நகரம்

இனியாவது உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசிடம் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 17 Jul 2019, 12:47 pm
தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின் இன்றைய நிகழ்வில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தை திமுக கொண்டு வந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலை 3 ஆண்டுகளாக நடத்தாத காரணத்தால், மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை.
Samayam Tamil MK Stalin


இதுதொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா நேற்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நிதி விடுவிக்காததற்கு விளக்கம் கொடுத்தார்.

மறைக்கவில்லை, தகவல் வரவில்லை; நீட் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர் சிவி சண்முகம் பதில்!

உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு இனியாவது முன் வருமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது.

இங்கிலாந்து அணி வென்றதற்கும் திமுக காரணம் என்பார்கள்- ஜெயகுமார் கிண்டல்!

22 ஆண்டுகளுக்கு பின்பு, தமிழகத்தில் வார்டு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி விடுவிக்கப்படுவதில் கால தாமதம் மட்டுமே ஆகியுள்ளது. விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு, அதற்கான நிதியை பெறுவோம் என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு – தேர்தல் ஆணையம்!

அடுத்த செய்தி