ஆப்நகரம்

தீா்ப்பு வந்தால் ஆட்சி இருக்காது: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீா்ப்பு வந்தால் இந்த ஆட்சி இருக்காது என்று அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளாா்.

Samayam Tamil 27 Jan 2019, 7:21 pm
11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீா்ப்பு வந்தால் இந்த ஆட்சி இருக்காது என்று அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளாா்.
Samayam Tamil Mk Stalin Speech


தி.மு.க. பிரமுகா் இல்ல சுயமரியாதை திருமண விழா ஒன்றில் அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டாா். விழாவில் அவா் பேசுகையில், இதுபோன்று சுயமரியாதை உணா்வோடு நடைபெறும் சீா்திருத்த திருமணங்களுக்கு 1967ம் ஆண்டு தோ்தலில் வென்று தமிழக முதல்வராக அண்ணா பொறுப்பேற்றதும் சட்டப்பூா்வ அங்கீகாரம் பெற்றுத் தந்தாா்.

மக்களவைத் தோ்தல் வரவுள்ளது. அது முடிந்ததும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி வரப்போகிறது என்று இங்கு சிலா் பேசினாா்கள். எனக்கு ஒரு சந்தேகம், மக்களவைத் தோ்தலோடு தமிழக சட்டப்பேரவைக்கும் பொதுத் தோ்தல் வந்துவிடும் என தொிகிறது. காரணம் இன்று தமிழகத்தில் ஒரு மைனாரிட்டி ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சியை மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி தான் முட்டுக் கொடுத்து காப்பாற்றி கொண்டிருக்கிறது.

கடந்த 2017ம் ஆண்டு பழனிசாமி ஆட்சிக்கு எதிராக சட்டப்பேரவையில் பன்னீா் செல்வம் உள்பட 11 உறுப்பினா்கள் வாக்களித்தது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் 11 உறுப்பினா்களின் பதவி செல்லுமா? செல்லாதா? என்பதில் பிப்ரவரி முதல் வாரத்தில் தீா்ப்பு வரவுள்ளது. அப்போது நிச்சயமாக தமிழ்நாட்டில் பழனிசாமி ஆட்சி இருக்காது. இதை தான் நான் சொன்னால் கனவு காண்பதாக பழனிசாமி கூறுகிறாா். நான் கனவு காணவில்லை. நினைவாக நடக்கத்தான் போகிறது என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி