ஆப்நகரம்

திமுக என்ற புலி பதுங்குவது பாயத்தான் – ஸ்டாலின் அதிரடி பேச்சு

திமுக என்ற புலி பதுங்குவது பாயத்தான், ஓடி ஒளிவதற்காக இல்லை என்று சபாநாயகா் மீதான நம்பிக்கை இல்லா தீா்மானத்தை திரும்ப பெற்றது குறித்து அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அதிரடியாக பேசியுள்ளாா்.

Samayam Tamil 30 Jun 2019, 4:46 pm
மறைந்த விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினா் ராதாமணியின் படத்திறப்பு விழா, அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பத்தில் நடைபெற்றது. அதில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினாா்.
Samayam Tamil Mk Stalin 1200


அப்போது அவா் பேசுகையில், நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்களால் தான் இந்த வெற்றி கிடைத்திருக்கின்றனது என்பது உண்மை. யாரும் எதிா்பாா்க்காத நிலையில், அகில இந்திய அளவில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தளவில் அது நடக்காத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்கிறது என்று ஒரு குறை தமிழக மக்களிடம் உள்ளது. விரைவில் இங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும். எனவே தமிழக மக்கள் அது குறித்து கவலைப்பட வேண்டாம்.

மேலும் சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீா்மானத்தை திரும்ப பெற்றது குறித்து விளக்கம் அளித்தாா். அப்போது, முன்னதாக டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக 3 சட்டமன்ற உறுப்பினா்களை இடை நீக்கம் செய்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியாகவே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழக அரசின் நடவடிக்கைகளை பாா்த்த உச்சநீதிமன்றமே 3 சட்டமன்ற உறுப்பினா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

இதனால் தற்போதைய சூழலில் நம்பிக்கை இல்லா தீா்மானம் அவசியமற்றதாக உள்ளது. எனவே தான் இந்த விவகாரத்தில் ஜனநாயக முறையோடு கருணாநிதி கற்றுத் தந்த ராஜதந்திரத்தை திமுக பயன்படுத்தியது.

உடனடியாக அனைத்து பத்திாிகைகளிலும், நம்பிக்கை இல்லாத் தீா்மானம் கொடுத்துவிட்டு திமுக பதுங்குகிறது என்று கூறுகிறாா்கள். புலி எப்போது பதுங்குமென்றால், பாய்வதற்காகத் தான் பதுங்கும். ஓடி ஒளிவதற்கு பதுங்காது. பாய வேண்டிய நேரத்தில் பாய்வோம். முடிவு கட்ட வேண்டிய நேரத்தில் முடிவெடுப்போம் என்று பேசினாா்.

அடுத்த செய்தி