ஆப்நகரம்

ஸ்டாலினா? அழகிரியா? தமிழ் சமயத்தின் கருத்துக்கணிப்பு முடிவு!

திமுகவின் அடுத்த தலைமை யார் என்ற தலைப்பில் தமிழ் சமயத்தின் கருத்துக்கணிப்பு முடிவு இதோ

Samayam Tamil 13 Aug 2018, 8:56 pm
திமுகவின் அடுத்த தலைமை யார் என்ற தலைப்பில் தமிழ் சமயத்தின் கருத்துக்கணிப்பு முடிவு இதோ:
Samayam Tamil dmk poll result


திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு அவசர செயற்கூட்டம் நாளை நடைபெற உள்ளது. திமுக கட்சி விதிமுறைகளின் படி, அக்கட்சியின் தலைவர் பதவி காலியானால், உடனே அப்பதவியை நிரப்பப்பட வேண்டும். இதனால், நாளை நடைபெறும் அவசர செயற்குழு கூட்டத்தில், முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வருவார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு அவருடைய மகன் மு.க அழகிரி இன்று காலை வந்தார். அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''கருணாநிதியின் உண்மையான விசுவாசமான உடன்பிறப்புகள் அனைவரும் என் பக்கம் தான் உள்ளனர். என்னை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார். திமுக வட்டாரத்தில் அழகிரியின் இந்த பேச்சு சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், திமுக.,வுக்கு அடுத்து யார் தலைமை ஏற்க வேண்டும் என்ற தலைப்பில் தமிழ் சமயத்தின் ஃபேஸ்புக் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில், மு.க. ஸ்டாலினுக்கு 51.8% மக்கள் வாக்களித்துள்ளனர். மு.க. அழகிரிக்கு 30.6% பேர் வாக்களித்துள்ளனர். 17.6% பேர் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

https://www.facebook.com/SamayamTamil/videos/204263920443913/

அடுத்த செய்தி