ஆப்நகரம்

பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி? ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன?

ஊரடங்கு கட்டுப்பாடுகள், குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 13 Oct 2021, 9:22 am
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
Samayam Tamil mk stalin


தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மே மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தமிழக அரசு மேற்கொண்ட தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் குறைந்தது. பின்னர் தடுப்பூசி முகாம்கள் விரிவுபடுத்தப்பட்டன. ஞாயிறு தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாதிப்பு குறைந்து வருவதால் நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
விடிய விடிய வாக்கு எண்ணிக்கை: ஒன்பது மாவட்டத்திலும் சூரியன் ஆதிக்கம்!
ஊரடங்கில் பெரியளவில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படியே வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு இதில் முடிவெடுக்கட்டும் என கூறியது.

விஜயதசமியை முன்னிட்டு வெள்ளிக் கிழமை கோயில்களை திறக்கலாமா என்பது குறித்து ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். விழாக் காலத்தில் கோயில்களை திறப்பது மக்களிடம் வரவேற்பு பெறும். அதேசமயம் இதில் மக்கள் பெருமளவில் கூடி கொரோனா பரவ காரணமாக அமைந்துவிடக்கூடாது என்றும் அரசு யோசிப்பதாக கூறுகிறார்கள். தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இந்த மாத இறுதி வரை அமலில் இருக்கும். எனவே அடுத்தகட்ட ஊரடங்கு குறித்தும், கோயில்கள் திறப்பு குறித்தும் முக்கிய முடிவுகள் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.
தேவர் ஜெயந்தியை குறிவைக்கும் சசிகலா: சுற்றுப் பயணத் திட்டம் இதுதான்!
அதேபோல் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் எவ்வாறு அந்தப் பணியை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது. நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளாதால், பள்ளிகள் மூலமாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியகூறுகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி