ஆப்நகரம்

நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவு பேராசிரியர் முருகன் கைது!

தலைமறைவு பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 23 Apr 2018, 11:22 am
மதுரை: தலைமறைவு பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil Nirmaladevi
நிர்மலாதேவி


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயற்சித்த வழக்கில், உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர்மட்ட அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது ஆடியோ மூலம் தெரியவந்தது. இந்த வழக்கு போலீசாரிடம் இருந்து, சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து 4வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. நிர்மலாதேவியை கைதைத் தொடர்ந்து, காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் தலைமறைவாகினர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

இந்நிலையில் காமராஜர் பல்கலைகழகத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட வந்த போது, சிபிசிஐடி போலீசாரால் முருகன் கைது செய்யப்பட்டார். இவர் மேலாண்மை கல்வி துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

முருகனை தனிப்படை அமைத்து, போலீசார் தேடி வந்தனர். இந்த சூழலில் தற்காலிக விரிவுரையாளரும் ஆய்வு மாணவருமான கருப்பசாமியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

MK Universtiy Professor Murugan arrested in Nirmala Devi Case.

அடுத்த செய்தி