ஆப்நகரம்

இந்தா இன்னுமொரு 50 ஆயிரம்... 2.5 கோடியிலிருந்து 3 கோடியாக உயர்த்தப்பட்ட எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி

எம்.எல்.ஏ க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை 2.5 கோடி ரூபாயிலிருந்து 3 கோடியாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது...

Samayam Tamil 3 Oct 2019, 9:49 pm
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்வதற்கு என்று ஒதுக்கப்ப்படும் தொகை தொகுதி மேம்பாட்டு நிதி என்று அழைக்கப்படும் .
Samayam Tamil eps


இதன்படி வழங்கப்படும் தொகை அந்தந்த எம்.எல்.ஏக்களின் எல்லைக்குட்பட்ட பகுதி மக்களின் நல்வாழ்வுக்காக செலவிடப்பட வேண்டும் என்பது விதி.

இதுவரை ஓவ்வொரு எம் எல் ஏ வுக்கும் சுமார் இரண்டு கோடியே 50 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதனை மூன்று கோடியாக உயர்த்தி இன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் பழனிசாமி இது குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார் என்பதும், இந்த அறிவிப்பு வெளியானபோது எதிர்க்கட்ட்சிகளின் கோரிக்கையும் ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் என்று செய்திகள் வெளியானதும் குறிப்பிடத் தகுந்தது..

அடுத்த செய்தி