ஆப்நகரம்

கிருஷ்ணசாமி ஒரு சுயநலவாதி; ஜாதியை பலிகடாவாக்க நினைக்கிறார்; கருணாஸ் கடும் கண்டனம்!

திருச்சி: தேவர் மகன் 2 விவகாரத்தில் கிருஷ்ணசாமிக்கு, எம்.எல்.ஏ கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Nov 2018, 2:04 pm
நடிகர் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார். இதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
Samayam Tamil Krishnasamy


இதற்கு பதிலளிக்கும் வகையில் எம்.எல்.ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் யார் என்ன படம் எடுக்க வேண்டும்.

என்ன பெயர் வைக்க வேண்டும் என்று கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்கள் தவிர நீங்கள் இல்லை. தேவர் மகன் படத்தால் தென் தமிழகத்தில் கலவரம் ஏற்பட்டதாக கூறுகிறீர்களே?

அந்தப் படத்தில் இரு சமூகத்திற்கு இடையே கலவரம் வரும் வகையில், ஒரு காட்சியாவது இருந்ததா? அந்தக் கதை ஒரு கிராமத்தில் இரு குடும்பத்திற்கு உள்ள பகையை மையமாகக் கொண்டது.

இறுதிக் காட்சியில் கூட அனைவரும் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்று கமல்ஹாசன் அறிவுரை கூறுவார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும் போது கூட, எவரும் தன் சாதியை உயர்வாக வைத்து படம் எடுக்கலாம்.

ஆனால் பிற சாதியை குறைத்து படம் எடுக்கக் கூடாது என்றார். அதன்படி பார்த்தால் சமீபகாலமாக சிலர் தேவர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக படம் எடுத்துள்ளனர். அப்போதெல்லாம் நீங்கள் மௌனம் காத்தது ஏன்?

அரசியல் அனாதையாக இருக்கும் நீங்கள், மாஞ்சோலை தொழிலாளர்கள் சம்பவத்தை வைத்து அரசியல் செய்தீர்கள். இதேபோல் தேவர் மகன் 2 படத்தை வைத்து தங்களை சாதி தலைவராக காட்டவும், சுயலாபத்திற்காக நீங்கள் சார்ந்த சாதியை பலிகடாவாக்க நினைப்பதும் கண்டிக்கத்தக்கது என்று கருணாஸ் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி