ஆப்நகரம்

Karunas: அக்டோபர் 4ம் தேதி வரை கருணாஸுக்கு நீதிமன்ற காவல்..!!

கருணாஸ் மீது தொடரப்பட்ட கூடுதல் வழக்கு ஒன்றில் அக்டோபர் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 27 Sep 2018, 5:15 pm
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் கருணாஸுக்கு அக்டோபர் 4ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி எழுப்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil Tamil-image
நீதிமன்ற காவல் பெற்றார் கருணாஸ் எம்.எல்.ஏ..!!


கடந்த 16ம் தேதி வள்ளூவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான கருணாஸ் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயரதிகாரியை தாக்கி பேசினார்.

இதனால் அவர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த 23-ம் தேதி சிறையில் அடைத்தனர். பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில், கருணாஸை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு நீதிமன்றம் போலீஸ் காவல் வழங்க முடியாது என கூறிவிட்டது.

இதற்கிடையே கடந்த ஏப்ரல் 10ம் தேதி சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறைகள் ஏற்பட்டது. இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் 2 வழக்குகளை கருணாஸ் மீது பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அக்டோபர் மாதம் 4-ம் தேதி வரை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அடுத்த செய்தி