ஆப்நகரம்

AIADMK: கருணாஸ் எடுத்த அதிரடி முடிவு - அனல்பறக்கும் உள்ளாட்சி தேர்தல் களம்!

விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பதை நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Dec 2019, 10:45 am
தமிழகத்தில் 3 ஆண்டுகள் காலதாமதத்திற்கு பின்னர், வருகின்ற 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் மாறி, மாறி வழக்கு தொடர்ந்து வந்தன.
Samayam Tamil Karunas


இறுதியாக நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை ஏதும் விதிக்கவில்லை. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது.

அன்று திமுக செய்த பிழையை இன்று அதிமுக செய்கிறதா?

இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பு அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் தனது ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

அதாவது தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கப் போவதாக கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி அறிவித்துள்ளது. விரைவில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் அதன் நிறுவனர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

நடுரோட்டில் அழுகிக் கிடந்த வெங்காய மூட்டைகள்... வீசிச் சென்றது யார்?

முன்னதாக டிடிவி தினகரனின் அமமுகவிற்கு ஆதரவாக கருணாஸ் பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அதிமுகவிற்கு ஆதரவான நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கருணாஸ் கலந்து கொண்டார். அப்போது நலத்திட்ட உதவிகளை பெறுவது தொடர்பாக முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளை நம்ப வேண்டாம்.

ஐயமாகி போன மய்யம் - கமலை வறுத்தெடுத்த "நமது அம்மா"

என்னிடமோ அல்லது அரசு அதிகாரிகளிடமோ நேரடியாக மனுக்களை கொடுங்கள் என்று பேசி சர்ச்சையை கிளப்பினார்.

அடுத்த செய்தி