ஆப்நகரம்

உதயநிதியை அமைச்சராக்குங்கள்! சட்டப்பேரவையில் ஒலித்த குரல்!

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என மறைமுகமாக வலியுறுத்திப் பேசியுள்ளார் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன்.

Samayam Tamil 5 May 2022, 3:59 pm
உதயநிதி விரைவில் அமைச்சராக உள்ளார் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சட்டப் பேரவையிலேயே இது தொடர்பாக முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார் பெரம்பலூர் சட்டபேரவை உறுப்பினர் பிரபாகரன்.
Samayam Tamil udhayanidhi stalin


உதயநிதியின் உழைப்பால் ஒரு தொகுதி பயன் பெறுவதோடு, நின்று விடாமல் தமிழ்நாடு முழுவதும் பயன் பெற வேண்டும், அதற்கு முதலமைச்சர் மனம் கனிய வேண்டும் என்று பெரம்பலூர் சட்டபேரவை உறுப்பினர் பிரபாகரன் பேசியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று போக்குவரத்து துறை மற்றும் சுற்றுலா, கலை பண்பாட்டு துறைகள் மீது மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
கூகுள் நிறுவனத்துடன் கைகோர்க்கும் பள்ளி கல்வித்துறை: புதிய திட்டம் தொடக்கம்!
இதில் பங்கேற்று பேசிய பெரம்பலூர் சட்டபேரவை உறுப்பினர் பிரபாகரன், " ஒரு கல் ஒரு கண்ணாடி வரும் போது சாதாரணமாக நினைத்தார்கள், ஆனால் இன்று ஒரு கல் செங்கல் வைத்து மத்திய அரசை எதிர்த்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அவரின் உழைப்பு ஒரு தொகுதியுடன் நின்று விட கூடாது, காலம் கனிந்து விட்டது. அவர் உழைப்பால் தமிழ்நாடு முழுவதும் பயன் பெற வேண்டும் அதற்கு முதலமைச்சர் மனம் கனிய வேண்டும்" என பேசினார்.

உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என திமுகவின் ஜூனியர் அமைச்சர்கள் முதல் சீனியர் அமைச்சர்கள் வரை பலர் கடந்த ஆண்டே கோரிக்கை வைத்தனர். துணை முதலவராக்க வேண்டும் என்றும் உடன்பிறப்புகள் கோஷம் எழுப்புகின்றனர்.

ஆனால் முதலவர் இது குறித்து வாய் திறக்கவே இல்லை. இந்த மாதமோ அடுத்த மாதமோ அவர் அமைச்சராகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக திமுக மேலிட வட்டாரங்கள் கூறிவருகின்றன.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உணவு: பள்ளிக் கல்வித்துறை எடுக்கும் முடிவு என்ன?
இந்நிலையில் சட்டபேரவையிலேயே பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என மறைமுகமாக கூறியது கவனத்தைப் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி