ஆப்நகரம்

“நான் 10 கோடி பணம் வாங்கினேனா? கடவுள் மீது சத்தியம் செய்து மறுக்கும் தமிமுன் அன்சாரி!

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி சசிகலா அணியிடம் இருந்து 10 கோடி ரூபாய் பணம் வாங்கினார் என்று எம்எல்ஏ சரவணன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை, தமிமுன் அன்சாரி முற்றிலும் மறுத்துள்ளார்.

TOI Contributor 13 Jun 2017, 5:23 pm
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி சசிகலா அணியிடம் இருந்து 10 கோடி ரூபாய் பணம் வாங்கினார் என்று எம்எல்ஏ சரவணன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை, தமிமுன் அன்சாரி முற்றிலும் மறுத்துள்ளார்.
Samayam Tamil mla thamimun ansari denies allegations of saravanan mla
“நான் 10 கோடி பணம் வாங்கினேனா? கடவுள் மீது சத்தியம் செய்து மறுக்கும் தமிமுன் அன்சாரி!


நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிமுன் அன்சாரி எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களிக்க 10 கோடி ரூபாய் பணத்தை சசிகலா அணியிடம் இருந்து பெற்றதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியுள்ள வீடியோவை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டிற்கு எம்எல்ஏ தமிமுன் அன்சாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் கூவத்தூர் விடுதிக்கு போகாதது அனைவரும் அறிந்த செய்தியாகும். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் செங்கோட்டையன் வந்த போது, எங்களுக்கு கரன்ஸி பாலிடிக்ஸ் பிடிக்காது என்றும், உங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு மாறாக எங்கள் கட்சிக்கு வாரிய பதவிகளை தாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தோம்.

ஆனால் சரவணன் எம்எல்ஏ இது போன்று குற்றச்சாட்டுக்களை சுமத்துவது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். அவருடைய குற்றச்சாட்டை 100 சதவீதம் மறுக்கிறோம், நிராகரிக்கிறோம். இது தொடர்பாக கட்சி சார்பில் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருப்பதாக தமிமுன் அன்சாரி கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி