ஆப்நகரம்

மக்கள் கருத்தின்படி எம்.எல்.ஏக்கள் முடிவெடுக்க வேண்டும்: இயக்குநர் பாக்யராஜ்

மக்கள் கருத்தின்படி எம்.எல்.ஏக்கள் முடிவெடுக்க வேண்டும் என்று இயக்குநர் பாக்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.

TNN 13 Feb 2017, 11:13 am
சென்னை: மக்கள் கருத்தின்படி எம்.எல்.ஏக்கள் முடிவெடுக்க வேண்டும் என்று இயக்குநர் பாக்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil mlas should act according to peoples wish says director bhagyaraj
மக்கள் கருத்தின்படி எம்.எல்.ஏக்கள் முடிவெடுக்க வேண்டும்: இயக்குநர் பாக்யராஜ்


இயக்குநர் பாக்யராஜ், அதிமுகவின் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்நிலையில் தற்போது நிலவும் தமிழக அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் எம்.எல்.ஏக்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். தங்களுக்கு எம்.எல்.ஏ சீட் வாங்கிக் கொடுத்த நபர் அல்லது குடும்பம் மீது பற்று கொண்டிருப்பதில் தவறில்லை என்று தெரிவித்தார்.

ஆனால் வாக்களித்த மக்களை ஒரு கணம் நினைத்து பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர்களின் கருத்துகளுக்கு எம்.எல்.ஏக்கள் மதிப்பளித்து, சரியான முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார். அதேசமயம் எங்கோ ஒரு இடத்தில் மறைந்து கொண்டு, தான் சுதந்திரமாக இருப்பதாக பொய் கூற வேண்டாம் என்று கூறினார். அவர் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

MLA's should act according to people's wish says Director Bhagyaraj.

அடுத்த செய்தி