ஆப்நகரம்

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வெளியேறும் ஆபத்தால் மீண்டும் ஆட்சி கவிழுமா?

சசிகலா மீது குற்றம்சாட்டிய ஓபிஎஸ் முதல்வர் பதவியிலிருந்து வெளியேறினார். அப்போதிருந்து, தமிழக அரசியலில் பல்வேறு பிரச்னைகள் நீடித்தது. இதன் காரணமாக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக உடைந்தது.

TNN 16 Mar 2017, 9:17 am
சென்னை : சசிகலா மீது குற்றம்சாட்டிய ஓபிஎஸ் முதல்வர் பதவியிலிருந்து வெளியேறினார். அப்போதிருந்து, தமிழக அரசியலில் பல்வேறு பிரச்னைகள் நீடித்தது. இதன் காரணமாக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக உடைந்தது.
Samayam Tamil mlas with disgruntled in sasikala team
அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வெளியேறும் ஆபத்தால் மீண்டும் ஆட்சி கவிழுமா?


இதற்கிடையில் சசிகலா முதல்வராக ஏற்பாடு நடந்தது. ஆனால் அவர் சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கி, சிறையில் அடைபட்டார். அவர் சிறைக்கு செல்வதற்கு முன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்தார். அவரும் 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு முதல்வரானார்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
பழனிச்சாமி தன் பெரும்பான்மையை நிரூபிக்க, எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது.

இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால், கர்ணாஸ், தமிழரசு ஆகிய எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதிக்கு செல்ல முடியவில்லை. மக்களால் துரத்திவிடப்பட்டனர். கர்ணாஸுக்கு மக்கள் அதிருப்தி மட்டுமில்லாமல் குடும்பத்தில் பிரச்னையும் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று டிடிவி தினகரன் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் தோப்பு வெங்கடாச்சலம் பங்கேற்கவில்லை. தோப்பு வெங்கடாச்சலம், கர்ணாஸ், தனியரசு, தமிமும் அன்சாரி ஆகியோர் சசிகலா அணியில் நீடிக்க மனமில்லாமல் அதிருப்தியில் இருப்பதால் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி