சென்னை: சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உட்பட 5 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக ஜவாஹிருல்லா மீது சிபிஐ கடந்த 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் ஜவாஹிருல்லா உட்பட 5 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், எழும்பூர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து 'ரம்ஜான்' நோன்பில் இருப்பதால் சரணடைய அவகாசம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்றம் வழங்கிய ஒருவார கால அவகாசம் நேற்றோடு முடிவடைந்ததையடுத்து, ஜவாஹிருல்லா உட்பட 5 பேரும் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சரணடைந்துவிட்டு தகவல் தெரிவித்தால் மட்டுமே ஜாமீன் மனு விசாரிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், ஜவாஹிருல்லா உட்பட 5 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
Tamil Nadu Muslim leader Jawahirullah surrendered in Egmore Court, sentenced to a year in jail in FCRA violation case.
ஜவாஹிருல்லா சரண், சென்னை உயர்நீதிமன்றம், சட்டவிரோத பணம் பெற்ற வழக்கு, சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஓராண்டு சிறை தண்டனை, தமிழ் செய்தி, FCRA violation Case, Manithaneya Makkal Katchi leader, Jawahirullaah, Madras HC, Jawahirullaa surrendered, Tamil News
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக ஜவாஹிருல்லா மீது சிபிஐ கடந்த 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் ஜவாஹிருல்லா உட்பட 5 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், எழும்பூர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து 'ரம்ஜான்' நோன்பில் இருப்பதால் சரணடைய அவகாசம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்றம் வழங்கிய ஒருவார கால அவகாசம் நேற்றோடு முடிவடைந்ததையடுத்து, ஜவாஹிருல்லா உட்பட 5 பேரும் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சரணடைந்துவிட்டு தகவல் தெரிவித்தால் மட்டுமே ஜாமீன் மனு விசாரிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், ஜவாஹிருல்லா உட்பட 5 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
Tamil Nadu Muslim leader Jawahirullah surrendered in Egmore Court, sentenced to a year in jail in FCRA violation case.
ஜவாஹிருல்லா சரண், சென்னை உயர்நீதிமன்றம், சட்டவிரோத பணம் பெற்ற வழக்கு, சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஓராண்டு சிறை தண்டனை, தமிழ் செய்தி, FCRA violation Case, Manithaneya Makkal Katchi leader, Jawahirullaah, Madras HC, Jawahirullaa surrendered, Tamil News