ஆப்நகரம்

மிஸ்டா் சி.எம். எல்லாத்திற்கும் ஒரு எல்லை உண்டு – கமல்ஹாசன் ஆதங்கம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயா் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது வரை அரசு மௌனம் காப்பதற்கு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கடும் கண்டனம் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 14 Mar 2019, 11:10 pm
தன் மனைவிக்கு ஒன்று என்றாலே போருக்கு புறப்படுகிற கணவர்கள் வாழ்ந்த நாட்டில் உங்க அம்மா ஆட்சிக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை எப்படி துடைக்க போறீங்க சாமி என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளாா்.
Samayam Tamil Kamal Haasan in MNM 2nd Meeting


பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வரும் நிலையில், இது தொடா்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வழக்கில் அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் பாதிக்கப்பட்டவா்களை அச்சுறுத்தும் வகையிலேயே அமைந்திருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனா்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளாா். அந்த பதிவில், “பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களின் பெயா் வெளியிடப்படக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஆனால், அதனையும் மீறி காவல் அதிகாாி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பொதுவெளியில் கூறுகிறாா். இதற்கு தமிழக அரசும் மௌனமாக உள்ளது.


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கேட்கவில்லை. இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக கேள்வி கேட்கிறேன். மிஸ்டா் சிஎம். இந்த கேள்விகள் அனைத்தும் உங்களுக்கத் தான். தன் மனைவிக்கு ஒன்று என்றாலே போருக்கு புறப்படுகிற கணவர்கள் வாழ்ந்த நாட்டில் உங்க அம்மா ஆட்சிக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை எப்படி துடைக்க போறீங்க சாமி? என்று அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளாா்.

அடுத்த செய்தி