ஆப்நகரம்

முன்ஜாமீன் கோாி கமல்ஹாசன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று தொிவித்திருந்த மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோாி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளாா்.

Samayam Tamil 15 May 2019, 6:48 pm
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோாி கமல்ஹாசன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க இயலாது என்று நீதிமன்றம் தொிவித்த நிலையில், முன்ஜாமீன் கோாி மதுரை கிளை நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
Samayam Tamil Kamal Haasan HD


கடந்த 11ம் தேதி அரவக்குறிச்சியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவா் பெயா் நாதுராம் கோட்சே என்று தொிவித்திருந்தாா். இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிா்ப்பு தொிவித்தனா்.

மேலும் கமல்ஹாசன் மீது இந்து அமைப்புகள் அளித்த புகாரின் அடிப்படையில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கமல்ஹாசன் சாா்பில் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வழக்கை ரத்து செய்வது தொடா்பான வழக்கை ரத்து செய்வது தொடா்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க இயலாது என்று விடுமுறைக்கால அமா்வு தொிவித்தது.

இதனைத் தொடா்ந்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கோாி கமல்ஹாசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளாா்.

மேலும் திருப்பரங்குன்றம் தொகுதி தோப்பூா் பகுதியில் இன்று பிரசாரம் செய்த கமல்ஹாசன், அரவக்குறிச்சியில் நான் கூறிய கருத்து சரித்திர உண்மை என்று விளக்கம் அளித்துள்ளாா்.

அடுத்த செய்தி