ஆப்நகரம்

நெடுவாசல் மக்களை சந்திக்க, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், நெடுவாசல் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

Samayam Tamil 24 Feb 2018, 3:04 pm
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், நெடுவாசல் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
Samayam Tamil mnm leader kamal haasan will meet neduvasal people on apr 4th
நெடுவாசல் மக்களை சந்திக்க, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு!


கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ’மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் புதுக்கட்சி ஒன்றை கமல் ஹாசன் தொடங்கினார். தனது கட்சி கொடி, நிர்வாகிகள் ஆகியவற்றை அறிவித்தார்.

இதையடுத்து அடுத்தக்கட்ட அரசியல் செயல்பாடு குறித்து, தனது கட்சியினர் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நெடுவாசல் மக்களை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் திருச்சியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MNM leader Kamal Haasan will meet Neduvasal People on Apr 4th.

அடுத்த செய்தி