ஆப்நகரம்

மதங்கொண்டு வந்தது சாதி சித்தம் கலங்குது சாமி: பொன் பரப்பி சம்பவத்திற்கு கமல் கண்டனம்!

அரியலூர் மாவட்டம் பொன் பரப்பி சம்பத்திற்கு கச்சிதமாக மருதநாயகம் பாடல் பொருந்துவதாக கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 20 Apr 2019, 1:58 pm
அரியலூர் மாவட்டம் பொன் பரப்பி சம்பத்திற்கு கச்சிதமாக மருதநாயகம் பாடல் பொருந்துவதாக கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil kamal 2


தமிழகம் முழுவதும் கடந்த 18ம் தேதி மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் வன்முறை நடைபெற்றது.

திருமாவளவனின் தோ்தல் சின்னமான பானையை சிலா் சாலையில் போட்டு உடைத்துள்ளனா். அதனை சிலா் தட்டிக்கேட்டுள்ளனா். இதனைத் தொடா்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைக்களப்பாக மாறியது. இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினா் திடீரென எதிர் தரப்பினா் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று அவா்களது வீடுகள் மீது காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.



இந்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. மேலும் வாகனங்களுக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இது தொடா்பாக 25 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். மேலும் அப்பகுதியில் காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கேட்டு சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு, இந்த சம்பவத்திற்கு மருதநாயகம் படத்திற்காக நானும், இளையராஜாவும் எழுதிய பாடல் கச்சிதமாக பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அந்தப் பாடலின் வரிகளை சுட்டிக் காட்டியுள்ளார். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த செய்தி