ஆப்நகரம்

சாகும் வரை ஜெயில் தான்: தீர்ப்பை வரவேற்கும் ஸ்ரீப்ரியா

கடலூர் போக்சோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மநீம ஸ்ரீப்ரியா வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 4 Oct 2021, 1:25 pm
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குமாரக்குடியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, கடந்த 12-2-2019 அன்று இரண்டு சமூகவிரோதிகளால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.
Samayam Tamil sripriya


இந்த வழக்கில் குணசேகரன் என்கிற திலகர் (வயது 34), கட்டமணியார் என்கிற ஜெய்சங்கர் (49) ஆகியோர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் இருவருக்கும் அவர்கள் மரணமடையும் வரை ஆயுள்தண்டனை விதித்து, நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா கடலூர் போக்சோ நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திமுகவின் ஸ்லீப்பர் செல்லா இந்த மாஜி அமைச்சர்? எடப்பாடி தரப்பு பீதி!
“கடலூர் போக்ஸோ நீதிமன்றம் முன்மாதிரியானதோர் தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு, சிறுமிகளுக்கு எதிரான கயமையில் ஈடுபடுவர்களுக்கு எச்சரிக்கை மணியாக ஒலிக்கட்டும். அதாவது குற்றவாளிகள் இருவரும் ஆயுள்காலம் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்கவேண்டியிருக்கும். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டுமென்று சொல்லும் இத்தீர்ப்பு, முக்கியமான ஒன்றாக அமைகிறது. இதன்வாயிலாக குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தீர்ப்பின் வழி அந்தச் சிறுமிக்குக் கிடைக்கும் பத்து லட்சம் ரூபாய் தவிர்த்து, கல்வி மற்றும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும். மேலும் மனரீதியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக்கொள்கிறது.
திருமாவிடம் ஸ்டாலின் காட்டிய உளவுத் துறை ரிப்போர்ட்?
பண்படாத சமூகத்தில் தண்டனைகள் வாயிலாகவே நீதியையும் அமைதியையும் நிலைநாட்ட இயலும் என்ற வகையில் இத்தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இனிவரும் காலங்களில் குற்றங்கள், தண்டனைகளற்ற லட்சியச் சமூகம் நோக்கி நாம் மானசீகமாகப் பயணிப்போம். ஒருநாள் நிச்சயம் கண்டடைவோம்” என்று ஸ்ரீப்ரியா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி