ஆப்நகரம்

6 – 8 வகுப்பு மாணவா்களுக்கு கையடக்க கணினி – அமைச்சா் தகவல்

6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 11.70 கோடி மாணவ, மாணவிகளுக்கு இலவச கையடக்க கணினி வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

Samayam Tamil 14 Jul 2018, 7:35 am
6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 11.70 கோடி மாணவ, மாணவிகளுக்கு இலவச கையடக்க கணினி வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.
Samayam Tamil Sengottaiyan


தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் பேசுகையில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கணினி மயமாக்கப்பட்டு இணையதளம் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு கல்வி கற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் நாட்டில் 5 ஆயிரத்து 200 பள்ளிக்கூடங்களில் ஸ்மாா்ட் வகுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் திறன் வளா்ப்பு பயிற்சி தொடா்பான புதிய பாடத்தை சோ்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சத்து 70 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி விரைவில் வழங்கப்பட உள்ளது.

அரசு பள்ளிக்கூடங்களில் மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்க மாணவா்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இதற்காக லண்டனில் இருந்து 100 பேராசிரியா்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனா். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். தோ்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று அமைச்சா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி