ஆப்நகரம்

இன்று முதல் தேர்தல் ஆணைய கட்டுப்பட்டுக்குள் தமிழக அரசு நிர்வாகம்

வரும் மே 16-ஆம் தேதியன்று தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.இதனால், இன்று முதல் தமிழகம் தேர்தல் ஆணைய கட்டுப்பட்டுக்குள் வந்துள்ளது

TNN 4 Mar 2016, 4:40 pm
சென்னை: வரும் மே 16-ஆம் தேதியன்று தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், இன்று முதல் தமிழகம் தேர்தல் ஆணைய கட்டுப்பட்டுக்குள் வந்துள்ளது.
Samayam Tamil model code in force in tamil nadu state now under ec control
இன்று முதல் தேர்தல் ஆணைய கட்டுப்பட்டுக்குள் தமிழக அரசு நிர்வாகம்


இன்று முதல் மாநில அரசு எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் அனைத்திலும் தேர்தல் விதிமுறைகளின் பரிசீலனையின் படி சரி பார்க்கப்படும். இன்று தேர்தல் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல் பணிகள் தொடர்பான நிர்வாகம் முழுவதும் தேர்தல் ஆணைய கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஹைதி இன்று தெரிவித்தார்.

இதனால், தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்கும் வரை, தற்போதைய அதிமுக அரசு தற்காலிக காபந்து அரசாக தான் செயல்படும். தற்போதைய அரசின் பதவிக்காலம் வரும் மே 22-ஆம் தேதியன்று முடிவடைகிறது. அதனால், மே 22-ஆம் தேதிக்கு முன் புதிய அரசு பதவியேற்க வேண்டும்.

இன்று அறிவிக்கப்பட்ட தேர்தல் அட்டவணையின் படி, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மே 16-ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறும். தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மே 19-ஆம் தேதியன்று அறிவிக்கப்படும்.

அடுத்த செய்தி