ஆப்நகரம்

தமிழ் மொழிக்கு தூதராக இருக்கிறார் மோடி: குருமூர்த்தி பெருமிதம்!!

'உலகத்தின் மீது தமிழை திணிப்பவராக, தமிழுக்கு தூதராக பிரதமர் மோடி இருந்து வருகிறார்'' என்று துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 28 Sep 2019, 5:42 pm
''தமிழுக்கு பிரதமர் மோடி தூதராக இருந்து வருகிறார், இதை அறியாத கிணற்று தவளைகளாக இருக்கும் தமிழ் இனவாதிகள் அவரை தமிழகத்தின் மீது இந்தியை திணிப்பவராக இருந்து வருகிறார் என்று குற்றம்சாட்டுகின்றனர்'' என்று குருமூர்த்தி பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil UNGA


பிரதமர் கடந்த வாரம் முழுவதும் அரசியல் முறை பயணமாக அமெரிக்க சென்று இருந்தார். அங்கு ஹவுடி மோடி நிகழ்ச்சியில் அந்த நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் கலந்து கொண்டார். ஹவுடி மோடி என்பது ஆங்கிலத்தில் '' how do you do, Modi'' என்பதாகும்.

இந்த நிகழ்ச்சியில் திரண்டு இருந்த 50, 000த்துக்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் மோடி பேசுகையில், ''ஹவுடி மோடி''க்கு தமிழ் உள்பட 8 மொழிகளில் விளக்கம் அளித்தார். தமிழில், ''எல்லாம் சவுக்கியமே'' என்று தெரிவித்து இருந்தார்.

உலகத்துக்கு புத்தரை பரிசா தந்தவங்க நாங்க...பயங்கரவாதத்துக்கு எதிரா பேசமாட்டோமா என்ன? ... ஐ.நா.வில் மோடி பெருமிதம்!

இதையடுத்து நேற்று ஐநா பொதுக் கூட்டத்தில் மோடி உரையாற்றினார். அப்போது சங்க கால புலவரான கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகளை மேற்கோள் காட்டினார். ''இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த புலவரான கணியன் பூங்குன்றனார், ''யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க ஐஎன்எஸ் கந்தேரி நீர் மூழ்கிக் கப்பல் தயார்!!

அதற்கான அர்த்தம், உலகில் இருக்கும் அனைத்தும், அனைவருக்கும் சொந்தம். அனைவரும் உறவினர்கள்'' என்றார். இது உலக அளவில் நேற்று முதல் பேசப்படும் வரிகளாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தனது டிவிட்டர் பதிவில், ''உலகத்தின் மீது தமிழ் மொழியை பிரதமர் மோடி திணித்து வருகிறார். உலகின் பழைய மொழியாக இருக்கும் தமிழ் மொழியை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்று அந்த மொழிக்கு தூதராக இருந்து வருகிறார். ஆனால், இது தெரியாமல் கிணற்றில் இருக்கும் தமிழ் இனவாதிகள், தமிழகத்தின் மீது இந்தியை மோடி திணிக்கிறார் என்று கூறி வருகின்றனர்'' என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி