ஆப்நகரம்

திமுக.,வின் முரசொலி பத்திரிக்கைக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்!

திமுக.,வின் அதிகாரப்பூர்வமான நாளேடான முரசொலியின் பவள விழா நடைப்பெற உள்ளதையொட்டி பிரதமர் மோடி தனது வாழ்த்தை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

TNN 1 Aug 2017, 12:31 pm
திமுக.,வின் அதிகாரப்பூர்வமான நாளேடான முரசொலியின் பவள விழா நடைப்பெற உள்ளதையொட்டி பிரதமர் மோடி தனது வாழ்த்தை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil modi sends greetings to dmks murasoli event
திமுக.,வின் முரசொலி பத்திரிக்கைக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்!


கடந்த 1942ல் தொடங்கப்பட்ட முரசொலி நாளேடு 75 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் பொருட்டு ஆகஸ்ட் 10,11ம் தேதி அதன் பவள விழா சென்னையில் நடைப்பெற உள்ளது.

இந்த விழாவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கல் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குவார்கள் என அதன் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு அண்மையில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் கமல் பெயரும் முரசொலி அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளது. அதோடு வைரமுத்து ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்க மதிமுக கட்சி பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் முரசொலிக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் மோடி, முரசொலி பவள விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி