ஆப்நகரம்

மோடி - ஷி ஜின்பிங் சந்திப்பு: தாமதமாக தொடங்கிய நிகழ்வு, உற்சாகம் குறையாத வரவேற்பு!

சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் முறைசாரா மாநாட்டின் இரண்டாம் நாளான இன்றைய நிகழ்வு சற்று தாமதமாக தொடங்குகிறது.

Samayam Tamil 12 Oct 2019, 10:49 am
9 மணியளவில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை பேட்ரோல் வாகனங்கள் கிண்டி ஹோட்டலிலிருந்து கோவளம் புறப்பட்டுச் சென்றன. அலாரம் எழுப்பியபடி இந்த வாகனங்கள் செல்வது அதிபர் வருகையை அறிவிக்கும் விதமாக அமைந்தது. ஹோட்டல் வாசலில் தஞ்சை, தர்மபுரி உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் மேடை அமைத்து இன்னிசை வரவேற்பு அளித்தனர்.
Samayam Tamil Untitled collage (1)


ஷி ஜின்பிங் - மோடி சந்திப்பு: இன்னைக்கு ஷெட்யூல் என்ன தெரியுமா?

அதிபர் ஷின் ஜின்பிங் கிளம்பிச் செல்வதால் கிண்டி, அடையார், இந்திராநகர், மத்திய கைலாஷ், சோழிங்கநல்லூர் கோவளம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. வேளச்சேரியிலிருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் பறக்கும் ரயில்களும் நிறுத்தப்பட்டன.

கடற்கரையை தனி ஆளாக சுத்தம் செய்த மோடி: நம்பலைன்னா வீடியோவை பாருங்க!

நேற்று மாமல்லபுரத்தில் இரவு உணவு முடித்து 8 மணிக்கு கிளம்பி 9 மணிக்கு கிண்டி வந்தடைவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒன்றரை மணி நேரம் தாமதமானதால் ஆங்காங்கே தடுத்து நிறுத்திவைக்கப்பட்ட பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள். அந்தவகையில் இன்று கிண்டி ஹோட்டலிலிருந்து ஜின்பிங் கிளம்பவும் தாமதமானது.

ஷி ஜின்பிங் - மோடி சந்திப்பு: ஊழியர்களை அலுவலகத்தில் சிறைவைத்த காவல்துறை!

9 மணிக்கு கிளம்புவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 9.40 மணிக்கே கிண்டி ஹோட்டலில் இருந்து ஜின்பிங் கிளம்பினார். பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க ஜின்பிங் செல்ல வழி நெடுகிலும் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 10.10 மணிக்கு சீன அதிபர் கோவளம் வந்தடைந்தார். மோடி ஜின் பிங்கை ஹோட்டலின் வாயிலில் வந்து வரவேற்றார். அதன்பின் பேட்டரி கார் மூலம் மொழிபெயர்ப்பாளர்கள் சகிதம் இரு நாட்டு தலைவர்களும் ஹோட்டல் வளாகத்திற்குள் சென்றனர். அதன் பின் இருவரும் அங்கு உரையாடிவருகின்றனர். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி