ஆப்நகரம்

நரேந்திரமோடி மீண்டும் பிரதமராவது உறுதி: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதிபட கூறியுள்ளார்.

Samayam Tamil 22 Mar 2019, 5:53 pm
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதிபட கூறியுள்ளார்.
Samayam Tamil நரேந்திரமோடி மீண்டும் பிரதமராவது உறுதி: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நரேந்திரமோடி மீண்டும் பிரதமராவது உறுதி: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்


கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதியானது பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் ஒன்றாக வருகின்றது. இந்த தொகுதியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், ஆலோசனை கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்; மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது கழகம் இரண்டாக உடைந்த நிலையில், சேவல் சின்னத்தில் வெற்றி பெற்ற தொகுதி இந்த குளித்தலை. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், வர இருக்கும் 2021ம் ஆண்டின் பொதுத்தேர்தலும் சரி, குளித்தலை தொகுதியில் அ.தி.மு.க தான் ஜெயிக்கும்.

மக்களுக்கு எந்தவித திட்டங்களையும் செய்யாமல், மகன், மகள், பேரன்களை எல்லாம் அமைச்சர்களாக்கியது தான் கருணாநிதி குடும்பத்தின் சாதனை. தி.மு.க கூட்டணியில், மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் என்கிறார். அவரது தங்கை கனிமொழி, தூத்துக்குடியில் வெற்றி பெற்ற பின்னர் தான் அறிவிக்கப்படும் என்கிறார். எனவே யார் பிரதமர் என்ற குழப்பம் திமுக கூட்டணியில் நீடித்து வருகிறது. ஆனால் அ.தி.மு.க கூட்டணியில் யார் பிரதமர் என்று சின்ன பையனை கூப்பிட்டு கேட்டால் கூட மோடி தான் என்று கூறுவார்.

ஆகவே அ.தி.மு.க கூட்டணி தான் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 40 தொகுதிகளிலும் ஜெயிக்கும். நரேந்திரமோடி மீண்டும் பிரதமராவது உறுதி என்றும் கூறினார்.

அடுத்த செய்தி