ஆப்நகரம்

ஆர்.கே.நகரில் டோர் டெலிவரி: பணத்தை வாரி இறைக்கும் கட்சிகள்

ஆர்.கே.நகரில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வீடு தேடி வந்து பணப்பட்டுவாடா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 28 Mar 2017, 9:47 pm
சென்னை: ஆர்.கே.நகரில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வீடு தேடி வந்து பணப்பட்டுவாடா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil money for vote comes to doorsteps
ஆர்.கே.நகரில் டோர் டெலிவரி: பணத்தை வாரி இறைக்கும் கட்சிகள்


சென்னை ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளர்கள் மும்மரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், பல்வேறு கட்சியினர் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று சமயம் தமிழ் பேஸ்புக் பக்கத்தில் தொப்பி அணிந்த சிலர் வீடு தேடிச்சென்று பணம் கொடுக்கும் வீடியோ ஆதாரம் ஒளிபரப்பப்பட்டது. சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவத் தொடங்கிய இந்த வீடியோவைத் தொடர்ந்து அத்தொகுதியில் பல கட்சிகளும் ஓட்டுக்கான பணத்தை டோர் டெலிவரி செய்வதாக தெரியவந்துள்ளது.

இப்போதுதான் மக்களின் கோரிக்கைகளையும் மனுக்களையும் அரசியல்வாதிகள் நினைத்துப் பார்க்கிறார்கள். இரவு நேரத்தில் தீடீரென வந்து குடிநீர் இணைப்பு வழங்குகிறார்கள். தொப்பி அணிந்து வந்து பணம் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இதனால், தேர்தல் நேர்மையாக நடக்குமா என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

அடுத்த செய்தி