ஆப்நகரம்

சட்டவிரோத பணப்பரிமாற்றம்: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறை விசாரணை

சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் சொத்து வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்

Samayam Tamil 2 Jul 2020, 2:20 pm
அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் மீது சட்ட விரோத பணப்பறிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதன் பேரில், அவருக்கு சொந்தமான இடங்கள், வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
Samayam Tamil ஜெகத்ரட்சகன்
ஜெகத்ரட்சகன்


அதில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் கணக்கில் வராத வகையில், ரூ.65 கோடி அளவுக்கு சொத்து வாங்கியதாக ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத் துறையினர் குற்றம் சாட்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன்அனுப்பியிருந்தனர். அதனடிப்படையில், சென்னையில் உள்ள அமலாகத்துறை அலுவலகத்தில் ஜெகத்ரட்சகன் நேற்று ஆஜரானார். அவரிடம், சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சென்னைக்கு புது கமிஷனர்..! விடைபெற்றார் ஏ.கே. விஸ்வநாதன்..!

முன்னதாக, கடந்த 1996ஆம் ஆண்டில் நில உச்சவரம்பு சட்ட விதிகளை மீறி குரோம் லெதர் நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 1.55 ஏக்கர் நிலத்தை தனக்கு தெரிந்த நபர்களுக்கு மாற்றி மோசடி செய்ததாக சிபிசிஐடி போலீசாரும் ஜெகத்ரட்சகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அது தொடர்பாகவும், அமலாகத்துறை அதிகாரிகள் நேற்றைய தினம் அவரிடம் விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது.

அடுத்த செய்தி