ஆப்நகரம்

பணபலம் வென்று விட்டது: அன்புமணி வருத்தம்

சட்டப்பேரவை தேர்தலில் பணபலம் வென்று விட்டது என அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

TNN 20 May 2016, 3:56 pm
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் பணபலம் வென்று விட்டது என அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil money power prevailed anbumani ramadoss
பணபலம் வென்று விட்டது: அன்புமணி வருத்தம்


இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: சட்டப்பேரவை தேர்தலில் பணபலம் வென்று விட்டது. 234 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது.

பாமக-வுக்கு மாநிலம் முழுவதும் 23 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர். ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் இத்தனை பேரும் பாமக-வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பாமக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. தோல்விகளால் நாங்கள் துவண்டு போய் விடவில்லை. முன்பை விட வேகமாக பணியாற்றுவோம். நலத்திட்டங்களை மறந்து பணத்துக்காக மக்கள் வாக்களித்தது வருத்தமாக உள்ளது.வெற்றி பெற்ற அதிமுக, திமுக-வினருக்கு எங்களது வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் பொறுப்புள்ள கட்சியாக செயல் புரிவோம் என்றார்.

அடுத்த செய்தி