ஆப்நகரம்

கை துண்டிக்கப்பட்ட நிலையில் குரங்கு: சிகிச்சை அளிக்க கோரிக்கை

மின்சாரம் தாக்கி கை துண்டிக்கப்பட்ட குரங்குக்கு சிகிச்சை அளிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

Samayam Tamil 5 Dec 2018, 3:19 pm
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கபட்டு அருகே உள்ள திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோயிலில், மின்சாரம் தாக்கியதில் கடந்த சில நாட்களாக வலது கை முழங்கை அளவுக்கு துண்டிக்கப்பட்ட குரங்கு வலியில் துடித்து சுற்றி வருகின்றது.
Samayam Tamil monkey


அதனால் அக்குரங்கை வனத்துறையினர் பிடித்து உரிய சிகிச்சை அளிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக உணவு கொடுத்தாலும் அக்குரங்கு வலியின் காரணமாக சாப்பிடுவதில்லை. குரங்கை பிடித்து சிகிச்சை அளிக்கவும் இதுவரையில் யாரும் முன் வரவில்லை.

குரங்கை பிடிக்க வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. குரங்கிற்கு உரிய சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது.

அடுத்த செய்தி