ஆப்நகரம்

மூக்கையா தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் இன்று 144 தடை

மூக்கையா தேவரில் 39வது நினைவு தினத்தை முன்னிட்டு ஆட்சியர் நடராஜன், மதுரை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உத்தரவிட்டார்.

Samayam Tamil 6 Sep 2018, 2:04 pm
மூக்கையா தேவரில் 39வது நினைவு தினத்தை முன்னிட்டு ஆட்சியர் நடராஜன், மதுரை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உத்தரவிட்டார்.
Samayam Tamil mookiah-thevar-mourning-day
மூக்கையா தேவர் நினைவு தினம்: மதுரையில் 144 தடை உத்தரவு அமல்


பசும்பொன் பகுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் அமைக்கபப்ட்டுள்ள மூக்கையா தேவன் நினைவிடத்தில், முக்கிய பிரமுகர்கள், தேவர் சமூகத்தை சேர்ந்த மக்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதனால் பசும்பொன் பகுதி முழுவதும் பலத்த காவல்துறை கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மக்கள் திறந்த வாகனங்களில் செல்வதற்கும், வாடகை வாகனங்களில் செல்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

புதன்கிழமை காலை 6 மணி முதல் வெள்ளி கிழமை 6 மணி வரை இந்த தடை விதிகள் அமலில் இருக்கும் என்று மதுவரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பி.எல். மூக்கையா தேவர், தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் 1952 முதல் 1971ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட போது, அதற்கு தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இந்தியளவில் அறியப்பட்டார்.

அடுத்த செய்தி