ஆப்நகரம்

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா..! ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

Samayam Tamil 31 Mar 2020, 8:59 pm
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது; தமிழகத்தில் இன்று மட்டும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி


நேற்றைய நிலவரப்படி மொத்த எண்ணிக்கை 74 ஆக இருந்தது. இன்று காலை கூடுதலாக 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் சற்றும் எதிர்பாராத தருணமாக புதியதாக 50 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் தமிழக மக்களுக்கு பேரிடியை கொடுத்துள்ளது. இந்த 50 பேரில் 45 பேர் டெல்லியில் நடைபெற்ற மத ரீதியான மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட திருநெல்வேலியைச் சேர்ந்த 22 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 1 , கன்யாகுமரி மாவட்டத்தில் 4 பேர், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 18 பேர் என மொத்தம் 45 பேருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் விவரங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி