ஆப்நகரம்

தமிழகத்தில் இன்று 82 பேர் டிஸ்சார்ஜ்..! 49 பேருக்கு கொரோனா...

தமிழகத்தில் இன்றி ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Apr 2020, 7:26 pm
தமிழகத்தில் கொரோனா தொடர்பான இன்றைய விவரங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அந்த விவரங்களில், இன்று தமிழ்நாட்டில் 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil அமைச்சர் விஜயபாஸ்கர்



ஆகையால் பாதிப்பு எண்ணிக்கை 1323 இல் இருந்து 1372ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 82 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். இதுவரை 365 கொரோனாவிலிருத்து குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக இன்று திருப்பூர் மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 7 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 பேர் இறந்துள்ளனர்.

ஊருக்கு போறீங்களா காசு நிறைய வச்சுக்கோங்க? திங்கள் முதல் டோல்கேட் வசூல் கட்டாயம்...

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் அதிக கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என கூறினார்.

அடுத்த செய்தி