ஆப்நகரம்

தமிழகத்தில் இத்தனை நாட்களில் இல்லாத பாதிப்பு... கொரோனா பிடியில் சென்னை...

தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு 9021 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 30 May 2020, 6:39 pm
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை தினமும் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 82 பேர் ஆவர். இன்றோடு தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 184 ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil chennai corona cases today


இன்று ஒரே நாளில் 687 பேர் குணமாகியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இன்று 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.


4 மாவட்டங்களுக்கு தளர்வு இல்லை: மருத்துவர்கள் குழு!

சென்னையில் அதிகபட்சமாக இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நாளில் கொரோனாவுக்கு சிகிச்சையும், மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 9021 என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி