ஆப்நகரம்

மதுரையில் மேலும் 7 பேருக்கு கொரோனா அறிகுறி? உடல் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது...

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் தொடர்புகளை முழுமையாக ஆராய்ந்து வருகிறோம் என மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Mar 2020, 2:37 pm
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வரும் நபரின் தற்போதையை நிலையை குறித்து ஆட்சியர் வினய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது; மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 54 வயதான நபரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
Samayam Tamil மதுரையில் மேலும் 7 பேருக்கு கொரோனா அறிகுறி


அவருக்கு கொரோனா சிறப்பு பிரிவில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த நபருக்கு ஏற்கெனவே இதர உடல்நிலை பிரச்சனைகள் உள்ளன. மருத்துவர்களின் முழு வீச்சில் அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த திங்கள் கிழமை அன்று அந்த நபர் அவருடைய எதிர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களின் விவரங்கள் கண்டறியப்பட்டு ஸ்கிரீனிங் செய்து வருகிறோம்.

காஞ்சிபுரத்தில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா!

அவர் வழக்கமாக செல்லும் மசூதியில் வருபர்களும் கண்காணிக்கப்படுகிறார்கள். மதுரையில் மேலும் 7 பேருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற அடிப்படையில் அவர்களின் ரத்த, சளி மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள 144 தடைக்கு மதுரை மாவட்டம் சார்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அத்தியாவசிய நிலையங்களை தவிர மற்றவைகள் இயங்க தடை செய்யப்பட்டுள்ளது. அவைகளையும் மேற்பார்வை செய்து வருகிறோம். தமிழக அரசின் உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். என மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்தார்.

அடுத்த செய்தி