ஆப்நகரம்

கோவையில் 1000க்கும் மேற்பட்டோர் கைது!

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களில் சுமார் 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

TOI Contributor 23 Jan 2017, 6:14 pm
கோவை: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களில் சுமார் 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil more than 1000 protestors arrested in coimbatore
கோவையில் 1000க்கும் மேற்பட்டோர் கைது!


சென்னை,மதுரை, அலங்காநல்லூர், கோவை, உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் சென்னை மெரினாவில் இன்று காலை போராட்டக்காரர்களை அகற்ற போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து ஒவ்வொரு இடமாக போராட்டங்களை வாபஸ் பெறப்பட்டுள்ளன. மேலும் சில இடங்களில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றனர்.

இந்நிலையில், கோவையின் காந்திபுரம், சி.ஐ.டி., கல்லூரி, வ.உ.சி., மைதானம், அவிநாசி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தவிர, சுமார் 1000 போராட்டக் காரர்களை போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி