ஆப்நகரம்

செங்கம் அருகே நடந்த விபத்தில் அதிர்ச்சி - மினி வேனில் சிக்கிய 1,700 லி எரி சாராயம்!

செங்கம் அருகே 1,700 லிட்டர் எரி சாராயம் ஏற்றி வந்த வேன் விபத்தில் சிக்கிய சம்பவத்தை அடுத்து, பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Samayam Tamil 25 Apr 2019, 5:34 pm
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட காஞ்சி அடுத்த கெங்கம்பட்டு ஏரிக்கரை அருகே மினி வேன் ஒன்று சென்றது. அதில் சுமார் 1,700 லிட்டர் எரி சாராயம் இருந்தது குறிப்பிடத்தகக்து.

இந்நிலையில் மினி வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென விபத்துக்கு உள்ளானது. இதையடுத்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவ்வழியாக சென்ற சிலர், கடலாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வாகனத்தில் இருந்த ஐம்பது கேன்களை சோதனை செய்தனர். அதில் எரி சாராயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டது.

பின்னர் அங்கு வந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், எரி சாராயம் ஏற்றி வந்த வாகனத்தை கைப்பற்றி தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

அடுத்த செய்தி