ஆப்நகரம்

கன்னியாகுமாியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா்கள் ரயில் மறியல்

புயலால் காணாமல் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்களை கண்டுபிடித்து தரவேண்டி கன்னியாகுமாி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா்கள் மறியலில் ஈடுபட்டுவருகின்றனா்.

TOI Contributor 7 Dec 2017, 12:24 pm
புயலால் காணாமல் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்களை கண்டுபிடித்து தரவேண்டி கன்னியாகுமாி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா்கள் மறியலில் ஈடுபட்டுவருகின்றனா்.
Samayam Tamil more than 5 thousand fisherman struggle from kanyakumari
கன்னியாகுமாியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா்கள் ரயில் மறியல்


ஓகி புயலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமாி மாவட்டத்தில் போதிய அளவில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினா். மேலும் புயலுக்கு முன்னதாக கடலுக்குச் சென்று காணாமல் போன ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா்களை மீட்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மீனவ குடும்பத்தினா் ஒவ்வொரு குழுவாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், நேற்று அரசு அதிகாாிகளுடன் மீனவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் இறுதியில் இந்த பேச்சுவாா்த்தை தோல்வியுற்றது. இதனைத் தொடா்ந்து செய்வதறியாது தவித்த மீனவா்கள் இன்று காலை திடீரென சாலை மாா்க்கமாக பேரணி செல்ல முடிவு செய்தனா்.

இதனைத் தொடா்ந்து 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா்கள் பேரணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக மீனவா்கள் ஊா்வலமாக வந்தனா்.

முதல்வா், துணைமுதல்வா் உள்ளிட்டோா் ஆா்.கே.நகாில் இன்று பிரசாரத்தை தொடங்கினா். இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சா்கள், அரசியல் தலைவா்கள் ஆா்.கே.நகருக்கு சென்று விட்டனா். இதனால் மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த முடியாமல் காவல்துறையினா் தவித்து வருகின்றனா்.

இந்நிலையில், திருநெல்வேலி காவல்துறை ஐஜி தலைமையில் அழைப்பு விடுக்கப்பட்ட பேச்சுவாா்த்தைக்கு மீனவா்கள் சம்மதம் தொிவிக்கவில்லை. மேலும், கடலில் ஆங்காங்கே மிந்துகொண்டிருக்கும் மீனவா்களின் உடல்களை உடனடியாக கரைக்கு கொண்டுவரவேண்டும், ஆயிரத்திற்கும் மேலான மீனவா்களின் நிலை என்னவென்றே தொியவில்லை. அவா்களை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் உள்ளிட்ட கோாிக்கைகளை முன்வைத்து மீனவா்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

அடுத்த செய்தி