ஆப்நகரம்

தீபாவளி: சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு 7 லட்சம் பேர் பயணம்!!

தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு அரசு பஸ்கள் மற்றும் ரயில்கள் மூலம் 7 லட்சம் பேர் பயணம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 19 Oct 2017, 3:52 pm
தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு அரசு பஸ்கள் மற்றும் ரயில்கள் மூலம் 7 லட்சம் பேர் பயணம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil more than 7 lakhs people have left chennai to celebrate deepavali
தீபாவளி: சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு 7 லட்சம் பேர் பயணம்!!


பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து சென்னை வந்து பணியாற்றுபவர்கள் தான் அதிகம். இவர்கள் தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பஸ் ஏற்பாடுகள் செய்து இருந்தது. கோயம்பேடு, பூந்தமல்லி தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பஸ் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

சென்னையில் இருந்து கடந்த 16ஆம் தேதி மட்டும் 6,000 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 5,156 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்களில் செல்ல 1.60 லட்சம் பயணிகள் முன் பதிவு செய்திருந்தனர்.

கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், பெருங்களத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று காலை வரை மொத்தம் 3.60 லட்சத்துக்கும் அதிகமானோர் அரசு பஸ்களில் பயணித்துள்ளனர்.
மேலும், ரயில் மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் மூலம் ஏறக்குறைய 2.5 லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கு வரும் 22 ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

More than 7 lakhs people have left Chennai to celebrate deepavali

அடுத்த செய்தி