ஆப்நகரம்

தமிழகத்தில் விதிமுறையை மீறி பட்டாசு வெடித்ததாக 924 போ் மீது வழக்கு

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 924 போ் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனா்.

Samayam Tamil 7 Nov 2018, 10:19 am
தமிழகம் முழுவதும் பட்டாசு வெடிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த நேரத்தை தவிா்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக சுமாா் 924 போ் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
Samayam Tamil Crackers 1


பட்டாசு வெடிப்பதால் பூமியில் காற்று மாசு அதிகரிப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடா்ந்து தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடா்ந்து தமிழக அரசு சாா்பில் எதிா் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனு விசாரணையின் போது பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க முடியாது. ஆனால், பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசே முடிவு செய்துகொள்ளலாம் என்று உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் காலை 6 – 7 மணி வரையிலும், இரவில் 7 – 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது.

மேலும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தவா்கள் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை கண்காணிக்கும் வகையில் தமிழகத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் தீபாவளியன்று குறிப்பிட்ட நேரத்தை தவிா்த்து பட்டாசு வெடித்ததாக சுமாா் 924 போ் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

இதுதவிர, மற்ற மாவட்டங்களான தஞ்சை-17, தேனி-2, திருச்சி-64, திருவாரூர்-31, விருதுநகர்-134, ராமநாதபுரம்-26, நாகை-27, மதுரை-109, நீலகிரி-15, கடலூர்-29, நாமக்கல்-46 கோவை- 184, திருநெல்வேலி 133, காஞ்சிபுரம்-79, திருவள்ளூர் 105 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக தமிழகம் முழுவதும் 924 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி