ஆப்நகரம்

நகைக் கடன் தள்ளுபடி: 1000 கோடி ரூ மோசடி - சிபிசிஐடி விசாரணை?

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி காரணமாக ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

Samayam Tamil 23 Sep 2021, 10:56 am
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த உடன் அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசு கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. அதிமுக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் கொங்கு மண்டலத்தில் அதிகளவில் நகைக் கடன்கள் பெற்றதும் அதைத் தொடர்ந்து அரசு அறிவிப்பு வெளியானதும் சந்தேகத்தை கிளப்பியது.
Samayam Tamil TN Gold Loan Scam


இது ஒரு பக்கம் இருக்க திமுக தேர்தல் வாக்குறுதியில் 5 சவரனுக்குள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படியும் நகை தள்ளுபடியாகும். கண்ணை மூடிக்கொண்டு தள்ளுபடி செய்துவிடுவார்கள் என்று கருதியதாலோ என்னவோ நூதன முறையில் மோசடி செய்துள்ளனர்.

அங்கிங்கெனாத படி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் இதுபோன்ற மோசடிகள் நடைபெற்றுள்ளன.

ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்கள்: கட்டம் கட்ட நாள் குறிச்சாச்சு!

*ஐந்து சவரனுக்குள் தான் கடன் தள்ளுபடி என்பதால் சேலம் மாவட்டத்தில் ஒரு நபர் தன்னிடமுள்ள நகைகளை ஐந்தைந்து சவரன்களாகப் பிரித்து அடகு வைத்து 340க்கும் மேற்பட்ட கடன்களை பெற்றுள்ளார்.

*சில இடங்களில் ஒரு நபர் மட்டும் தலா 600 கடன்களுக்கும் மேல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

*ஒரு சில இடங்களில் கவரிங் நகைகளை வைத்து கடன்களைப் பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.

*இன்னும் ஒருபடி மேலே போய் சில இடங்களில் நகைகளை அடகு வைக்காமலே நகைக் கடன் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இத்தகைய மோசடிகள் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் துணையின்றி நடைபெற வாய்ப்பில்லை. எனவே இந்த மோசடிகளுக்கு பின்னால் உள்ளவர்கள் யார் யார் என கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. 1000 கோடி ரூபாய்க்கும் மேல் இவ்வாறு மோசடி நடைபெற்றிருக்கும் என்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின் இதை எப்படி சமாளிப்பார்? ஆளுநர் நடத்தும் ஆலோசனை!

அதிகாரிகள் துணிச்சலுடன் மோசடியில் இறங்கியிருந்தால் துறை ரீதியாக அமைச்சரும் ஒத்துழைத்திருக்க வேண்டும் என்று சந்தேகம் கிழப்புகிறார்கள். எனவே கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு இந்த விவகாரத்தில் விரைவில் சிக்குவார் என்றும் இதன் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்றும் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த செய்தி