ஆப்நகரம்

கொஞ்ச நஞ்சமல்ல; லட்சத்தில் உச்சம் - சென்னையை காலி பண்ணிய பொங்கல் விடுமுறை!

சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பேருந்துகளை பெரிதும் பயன்படுத்தியுள்ளனர்.

Samayam Tamil 14 Jan 2020, 11:47 am
தமிழர்களின் இல்லங்களில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை. தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் இந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வர்.
Samayam Tamil Pongal Buses


உழைக்கும் மக்களின் விழாவாக, இயற்கையை வணங்கும் பண்டிகையாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. உழவு செழிக்க உதவிய சூரியனுக்கும், பிற உயிர்களுக்கு நன்றி தெரிவிக்கப்படுவது வழக்கம்.

இப்படியா எரிக்கறது?- மூச்சே விட முடியலபா - எகிறி அடிக்கும் காற்று மாசு!

மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகி பண்டிகையில் தொடங்கி தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

புத்தாடை அணிந்து புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து மகிழ்ச்சி கொள்வர். இந்த பெருவிழாவை கொண்டாட வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர்.

இதையொட்டி தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தலைநகர் சென்னையில் லட்சக்கணக்கான வெளியூர் மக்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

ஒரே ராத்திரி, ஓஹோன்னு விற்பனை; அதுவும் ஒரு கோடியாம்- கருவாட்டுக்கு வந்த மவுசு!

இவர்களின் வசதிக்காக கடந்த 10ஆம் தேதி முதல் 10 ஆயிரத்து 517 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை நிலவரப்படி 5 லட்சத்து 50 ஆயிரத்து 890 பயணிகள் அரசுப் பேருந்துகள் பயணித்துள்ளது தெரியவந்துள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் கடைசி நாளான இன்று அதிகளவில் பொதுமக்கள் பயணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிட்டிருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை யார் நடத்துவது?- உயர் நீதிமன்றம் போட்ட ’பலே’ கண்டிஷன்!

இதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்து திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று போகி பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக காற்றை மாசுபடுத்தும் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சூழலில் சென்னையில் இன்று காற்று மாசு அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி