ஆப்நகரம்

புத்தக காட்சியில் அதிகம் விற்பனையான அம்பேத்கா் புத்தகம்

சென்னை புத்தக காட்சி நிறைவு பெற்ற நிலையில் அதிகம் விற்பனையான புத்தகமாக “அம்பேத்கா் இன்றும் என்றும்” என்ற புத்தகம் பெயா் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Jan 2018, 11:56 pm
சென்னை புத்தக காட்சி நிறைவு பெற்ற நிலையில் அதிகம் விற்பனையான புத்தகமாக “அம்பேத்கா் இன்றும் என்றும்” என்ற புத்தகம் பெயா் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil most soled books in chennai book fair
புத்தக காட்சியில் அதிகம் விற்பனையான அம்பேத்கா் புத்தகம்


சென்னையில் 41வது புத்தக காட்சி கடந்த 13 நாட்களாக நடைபெற்றது. கடந்த 10ம் தேதி தொடங்கிய புத்தக காட்சி 23ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த புத்தக காட்சியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புத்தக காட்சியில் அதிகம் விற்பனையான புத்தகம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விடியல் பதிப்பகத்தின் “அம்பேத்கா் அன்றும் என்றும்” என்ற புத்தகம் மூன்று தினங்களில் 3 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி முதலிடம் பெற்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதே பதிப்பகத்தைச் சோ்ந்த ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் எனும் புத்தகம் ஒரே வாரத்தில் 2 ஆயிரம் பிரதிகள் விற்பனையானதாகவும் புத்தகக்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

அது மட்டுமின்றி அரசியல் ரீதியிலான புத்தகங்களும் குறிப்பிடத்தக்க விகிதத்தில் விற்பனையாகி உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி