ஆப்நகரம்

ஜெயலலிதா மறைவு: போயஸ் கார்டனில் அலைமோதும் மக்கள் கூட்டம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஏராளமான பொதுமக்கள் சென்றுவருகின்றனர்.

TNN 8 Dec 2016, 10:11 pm
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஏராளமான பொதுமக்கள் சென்றுவருகின்றனர்.
Samayam Tamil mourning to jayalalithaa people floods in her poes garden residency
ஜெயலலிதா மறைவு: போயஸ் கார்டனில் அலைமோதும் மக்கள் கூட்டம்


ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, 2 நாட்கள் கடந்த நிலையில், இன்னமும் மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோன்று, போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டிலும் ஏராளமான பொதுமக்கள் நேரில் சென்று, அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இதனால், போயஸ் தோட்டத்தைச் சுற்றிலும் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலத்த சோதனைக்குப் பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதேசமயம், அங்கே புகைப்படம் எதுவும் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஜெயலலிதாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அம்மா, அம்மா என்றபடி பலரும் கண்ணீர் விட்டுக் கதறியழும் காட்சி, பார்ப்போரை நெஞ்சுருகச் செய்வதாக உள்ளது.

Mourning to Jayalalithaa: people visiting continuously to her Poes Garden residency, Chennai.

அடுத்த செய்தி